Monday, December 16, 2013

Wednesday, December 4, 2013

வீணை அருகில் இல்லாத போதினிலும்.

வீணை பேசி விலகிச் சென்ற பின்னும்
விரல்களின் மோதல் அடங்கவில்லை இன்னும்.
துடித்துக் கொண்டுதான் தவிக்கின்றது
மீண்டும் மீண்டும் மீட்டச் சொல்லி
வீணை அருகில் இல்லாத போதினிலும்.

சங்கேத பரிமாற்றங்களா.,?

பச்சைக் கிளிக்குஞ்சொன்று
படபடப்பபாய் கூடு தேடிப்
பறந்து போவதை குரங்கெப்படி
கண்டுணர்ந்தது...?
ஒரு மரத்து சொந்தங்களா இல்லை
சங்கேத பரிமாற்றங்களா.,?

மழை வருவது மயிலுக்குத் தெரியும்...

மழை வருவது மயிலுக்குத் தெரியும்...
மனம் போவது நட்புக்குத் தெரியும்...
துணை வாடுதல் காதல் உணரும்...
உயிர் பிரிதலில் ஊனும் வலிக்கும்...

நிலாக் காயலில்

நிலாக் காயலில் உதிக்கும்
துன்பச் சுரங்கள் யாவும்
இளங்காலைப் பகலவனின் 
இதம் பரவிக் கரைந்து மாய்கிறது.

"வருந்தாதே மனமே"

நலம் விசாரித்து அகம் மகிழ
ஆறுதல் சொல்ல உயிரோடு
உறவாடும் உன்னத நட்பூக்கள்
அருகிலும் தொலைவிலும் அன்புடன்
உலவுகையில் நானொருவன் கேட்காதது 
ஒரு பெருங்குறையல்லவே...!
அது உன் 
செவிமடுத்தும் உளம் உணரா
வெறும் வாய்ச்சொல் தானே...!
இருப்பினும் உரைக்கின்றேன் என்
மனசாட்சி உறுத்துவதால்...
"வருந்தாதே மனமே"

புறா பறந்தது.

கூண்டை விட்டு புறா பறந்தது..
சீண்டும் காக்கைளும் அடங்கிக் போனது
வெறித்தோடிக் கிடக்கிறது மரக்கிளைகள்
கனி சுவைப்போர் யாருமின்றி தோப்புக்குள்..

செல்லக் குருவியே