Sunday, September 26, 2010

செந்தமிழே நீ வாழ்க.

செந்தமிழே..! என்னுயிரே...!
செவ்வுதிரம் நிறைந்தவளே...!
பைந்தமிழே...! பழரசமே...!
பருகையிலே பரவசமே...!

தாய்ப்பாலில் உட்புகுந்து
மெய்யெல்லாம் கலந்து விட்டாய்.
தந்தையின் போதனையால்
ஓசையாய் உருவெடுத்தாய்.

ஆசானின் ஓதலினால்
பேச்செல்லாம் பெருக்கெடுத்தாய்.
அன்பான ஆளுமையால்
பண்பாக பரிணமித்தாய்.

உயிரோடு உறவாடும்
என் தமிழே நீ வாழ்க...!
மண்ணோடு மாய்ந்தாலும்
செந்தமிழே நீ வாழ்க..! நீ வெல்க...!



என்றும் அன்புடன்,
ஷோபினிஸ்ரீ